13 ஆம் நூற்றாண்டு.
சோழ சேர , பாண்டிய நாட்டு வரி நிர்வாகம் காலம் காலமாக இருந்த வழக்கிலிருந்து மாரி அரசு நிர்வாகிகளின் கையில் வந்தடைந்ததை இந்த பதிவில் விவரியாக படித்தோம். அந்த காலத்தில் இருந்து சற்று காலச்சக்கரத்தை சுழற்றி 13 ஆம் நூற்றாண்டில் கால் வைப்போம். பாரதத்தின் அப்போதைய நிலைமை காண்பவர்களின் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். எங்கு பார்க்கினும் பசி. வறுமை..!தொண்ணூறு (90) சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். பஞ்சம் எனும் பேரிடர் , வருடாவருடம் தவறாமல் வந்தது.ஆண்டுதோறும் பசியாலும் பிணியாலும் மக்கள் சாரை சாரையாக மடிந்தனர். ஊர் நிர்வாகங்கள் வழக்கொழிந்து போய் கொலைகளும் கொள்ளைகளும் பன்மடங்கு அதிகரித்தன. நல்ல விளை நிலங்கள் விதைப்பில்லாமல் பட்டு போயின.
ஆனால் புத்தகங்களில் நாம் படித்த இந்தியா , மிகவும் செழிப்பான , சீரும் சிறப்பும் இன்னும் பல செல்வங்களும் மிகுந்த நாடாயிற்றே? என்று வினவுகிறீர்களா? ஆம். புத்தகங்களில் நாம் படித்த இந்தியாவும் உண்மையே. ஆனால் அந்த இந்தியாவில் அரசர்களும் நாட்டின் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்களும் மட்டுமே இருந்தனர். மிதி உள்ள அனைவரும் வியர்வை சிந்த உழைத்து விட்டு அவ்வுழைப்பிற்கு தகுந்த கூலி வாராமல் ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாழ்ந்தனர். வரலாற்றில் நமக்கு இழைக்கப்பட்ட்ட அநீதிகளில் இது தான் மிகவும் கொடுமையானது. நமது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு அரசர்களும் அவர்களின் சேவகர்களும் வாழ்ந்த வாழ்க்கையானது நமது வரலாறாக சித்தரிக்கப்படுகிறது.
இருக்கட்டும். இந்த வறுமையானது எப்பொழுது விதைக்கப்பட்டது? நாம் இந்த பதிவில் படித்தபடி வரி விதிக்கும் அதிகாரமானது ஊர் தலைவரிடமிருந்து பறிக்கப்பட்டு தலைநகரத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் முதலில் அரசர்களும் , அவர்களின் அதிகாரிகளும் நியாயமாக நடந்ததால் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. ஆனால் 13 ஆம் நூற்றாண்டில் அரசனுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அரசனும் அவனுடையா அரசாங்கமும் மக்களை விட முக்கியமாக கருதப்பட்டனர். இது பழங்காலத்தில் இருந்து புழங்கி வரும் கருத்து தான் என்றாலும் 13 ஆம் கால கட்டத்தில் இது கடுமையாக பின்பற்றப்பட்டது . எவ்வளவு கடுமையாக என்று கேட்கிறீர்களா? நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உழைப்பிலும் முதலுரிமை மன்னனுக்கு கோரப்பட்டது. மன்னனுக்கு போக மீதி எஞ்சியது மட்டுமே மக்களுக்கு கிட்டியது. இதுவும் பழங்காலத்தில் இருந்து வரும் வழக்கம் தான். ஆனால் எங்கே வேறுபட்டது என்றறிய நாம் கணக்கு புத்தகத்தை புரட்ட வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு 10 ரூபாய் வருமானமென்றால் அதில் 9 ரூபாய் ஐம்பது காசுகள் அரசுக்கு சேர வேண்டியதாக வசூலிக்கப்பட்டது. இந்த தொகை எப்படி வந்தது?? அதில் தான் அந்த அதிகாரிகளின் குரூர புத்தி வெளிப்பட்டது. ஒரு குடும்பம் ஒரு வேளை , (குறிப்பு: ஒரு வேளை, மூன்று வேளையல்ல..! ), உணவருந்த ஆகும் செலவு ஐம்பது காசுகள் தான் என அதிகாரிகள் குத்து மதிப்பாக தீர்மானித்தனர் . ஆக , ஐம்பது காசுகள் மட்டுமே மக்களுக்கு விட்டுவிட்டு மற்றதை அபகரித்தனர். இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒருவன் எவ்வளவு வரி கட்டுவான் என்று அனுமானித்து அதில் இரண்டு மடங்கு வரி நியமித்தனர். கட்ட மறுத்தால் அடி உதை ! கட்ட முடியாவிட்டால் மரண தண்டனை , மற்றும் நிலம், ஆநிரை இன்ன பிற சொத்து அபகரிப்பு, என்று கொடுங்கோல் ஆட்சி நடந்தது. முகலாயர்கள் , மராட்டியர்கள் ,நாயக்கர்கள், ஆங்கிலேயர் என அரசர்கள் மாறினாலும் இந்த கொடுமையான வரி நிர்வாகம் மட்டும் மாறவே இல்லை. இந்த வரிச்சுமையை தவிர்க்கத்தான் மக்கள் வரி ஏய்ப்பு செய்ய துவங்கினர். வருமானத்தை ஒளிந்து வைப்பது, செல்வங்களை பதுக்குவது , வெளியே எளிமையாக வாழ்வது..இது போன்ற நம்முடைய தேசிய குணங்கள் இங்கு இருந்துதான் பிறந்தன.
ஆம்.13 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வரி நிர்வாகம் ,20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. வியப்பாக இருக்கிறதா? பழைய செய்திகளை புரட்டவும்.1991 ஆம் ஆண்டு கூட நமது அரசு, நாம் தேர்வு செய்த ஜனநாயக அரசு, ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ள வருமானத்தில் 56% வரி விதித்தது. அதாவது ஒரு லட்சத்தில் 56000 .அரசுக்கு. மீதி உள்ள 44000 மட்டுமே சம்பளம் வாங்கியவருக்கு. வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் அரசுக்கு சொந்தம் என்றால் நீங்கள் வரி செலுத்த ஆவலாக இருப்பீர்களா?
ஆனால் புத்தகங்களில் நாம் படித்த இந்தியா , மிகவும் செழிப்பான , சீரும் சிறப்பும் இன்னும் பல செல்வங்களும் மிகுந்த நாடாயிற்றே? என்று வினவுகிறீர்களா? ஆம். புத்தகங்களில் நாம் படித்த இந்தியாவும் உண்மையே. ஆனால் அந்த இந்தியாவில் அரசர்களும் நாட்டின் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்களும் மட்டுமே இருந்தனர். மிதி உள்ள அனைவரும் வியர்வை சிந்த உழைத்து விட்டு அவ்வுழைப்பிற்கு தகுந்த கூலி வாராமல் ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாழ்ந்தனர். வரலாற்றில் நமக்கு இழைக்கப்பட்ட்ட அநீதிகளில் இது தான் மிகவும் கொடுமையானது. நமது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு அரசர்களும் அவர்களின் சேவகர்களும் வாழ்ந்த வாழ்க்கையானது நமது வரலாறாக சித்தரிக்கப்படுகிறது.
இருக்கட்டும். இந்த வறுமையானது எப்பொழுது விதைக்கப்பட்டது? நாம் இந்த பதிவில் படித்தபடி வரி விதிக்கும் அதிகாரமானது ஊர் தலைவரிடமிருந்து பறிக்கப்பட்டு தலைநகரத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் முதலில் அரசர்களும் , அவர்களின் அதிகாரிகளும் நியாயமாக நடந்ததால் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. ஆனால் 13 ஆம் நூற்றாண்டில் அரசனுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அரசனும் அவனுடையா அரசாங்கமும் மக்களை விட முக்கியமாக கருதப்பட்டனர். இது பழங்காலத்தில் இருந்து புழங்கி வரும் கருத்து தான் என்றாலும் 13 ஆம் கால கட்டத்தில் இது கடுமையாக பின்பற்றப்பட்டது . எவ்வளவு கடுமையாக என்று கேட்கிறீர்களா? நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உழைப்பிலும் முதலுரிமை மன்னனுக்கு கோரப்பட்டது. மன்னனுக்கு போக மீதி எஞ்சியது மட்டுமே மக்களுக்கு கிட்டியது. இதுவும் பழங்காலத்தில் இருந்து வரும் வழக்கம் தான். ஆனால் எங்கே வேறுபட்டது என்றறிய நாம் கணக்கு புத்தகத்தை புரட்ட வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு 10 ரூபாய் வருமானமென்றால் அதில் 9 ரூபாய் ஐம்பது காசுகள் அரசுக்கு சேர வேண்டியதாக வசூலிக்கப்பட்டது. இந்த தொகை எப்படி வந்தது?? அதில் தான் அந்த அதிகாரிகளின் குரூர புத்தி வெளிப்பட்டது. ஒரு குடும்பம் ஒரு வேளை , (குறிப்பு: ஒரு வேளை, மூன்று வேளையல்ல..! ), உணவருந்த ஆகும் செலவு ஐம்பது காசுகள் தான் என அதிகாரிகள் குத்து மதிப்பாக தீர்மானித்தனர் . ஆக , ஐம்பது காசுகள் மட்டுமே மக்களுக்கு விட்டுவிட்டு மற்றதை அபகரித்தனர். இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒருவன் எவ்வளவு வரி கட்டுவான் என்று அனுமானித்து அதில் இரண்டு மடங்கு வரி நியமித்தனர். கட்ட மறுத்தால் அடி உதை ! கட்ட முடியாவிட்டால் மரண தண்டனை , மற்றும் நிலம், ஆநிரை இன்ன பிற சொத்து அபகரிப்பு, என்று கொடுங்கோல் ஆட்சி நடந்தது. முகலாயர்கள் , மராட்டியர்கள் ,நாயக்கர்கள், ஆங்கிலேயர் என அரசர்கள் மாறினாலும் இந்த கொடுமையான வரி நிர்வாகம் மட்டும் மாறவே இல்லை. இந்த வரிச்சுமையை தவிர்க்கத்தான் மக்கள் வரி ஏய்ப்பு செய்ய துவங்கினர். வருமானத்தை ஒளிந்து வைப்பது, செல்வங்களை பதுக்குவது , வெளியே எளிமையாக வாழ்வது..இது போன்ற நம்முடைய தேசிய குணங்கள் இங்கு இருந்துதான் பிறந்தன.
ஆம்.13 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வரி நிர்வாகம் ,20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. வியப்பாக இருக்கிறதா? பழைய செய்திகளை புரட்டவும்.1991 ஆம் ஆண்டு கூட நமது அரசு, நாம் தேர்வு செய்த ஜனநாயக அரசு, ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ள வருமானத்தில் 56% வரி விதித்தது. அதாவது ஒரு லட்சத்தில் 56000 .அரசுக்கு. மீதி உள்ள 44000 மட்டுமே சம்பளம் வாங்கியவருக்கு. வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் அரசுக்கு சொந்தம் என்றால் நீங்கள் வரி செலுத்த ஆவலாக இருப்பீர்களா?
கருத்துகள்
கருத்துரையிடுக