முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.


"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு" 
என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும்.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி"

என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும்.

தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருந்தன. ஊருக்கு உட்பட்ட உழவு நிலங்களின் விளைச்சல் ஆண்டுக்கு மூன்று முறை தீர்மானிக்கப்பட்டு வரி தீர்வை அறிவிக்கப்பட்டது. உழுவோரும்,தொழில் செய்வோரும் மற்றும் கோயில் பூசாரிகளும்  தமது வருமானங்களில் பத்தில் இல் ஒரு  பங்கு(10%) முதல் நாலில் இல் ஒரு பங்கு(25%) வரை காலத்திற்கேற்ப வரி செலுத்தினர். இவ்வாறாக சேர்க்கப்படட வரிப்பணத்திலிருந்து ஒரு பங்கு அரசுக்கு சென்றது. இன்றொரு பங்கு ஊருக்கு வேண்டிய கடடமைப்பு வேலைகளை செய்வதற்கு ஒதுக்கப்பட்டது . இன்றொரு பங்கில் காவலாளிகள் , நாட்டிய கலைஞர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை வரவு செலவு கணக்குகள் சரி பார்க்க பட்டு லாப நஷ்டங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த ஊர் வழக்கு வரலாற்றின் வெளிச்சத்திற்கு உட்படாத மிக பண்டை காலத்தில் உருவாகி பல்லாயிரம் வருடங்கள் நடைமுறையில் இருந்தது. ஊரே வரி நிர்ணயித்ததால் , வரித்தொகை நியாயமாகவும் , மக்களுடைய கஷ்ட துக்கங்களுக்கு  ஏற்ற படியும் கணக்கிலிடப்படடது. ஆதலால் வரி ஏய்ப்பு என்பதே சமூக வழக்கில் இல்லை. தமிழகத்தின் எல்லா ஊர்களும் செல்வத்தில் திளைத்தன. உள்ளூர் வியாபாரம், உழவு , கடல் வணிகம்  என எல்லாவற்றிலும் தமிழர்கள் வெற்றி  கொடி நாட்டினர்.  இத்தகைய  மேன்மையான தத்துவம் எல்லா  நேரமும் மேன்மேலும் உயர முடியாது அல்லவா? எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வர  வேண்டியது இயற்கையின் நியதி.   அது போல தமிழகத்திற்கும் ஒரு நாள் இழிவு வந்தது ..

10 ஆம் நூற்றாண்டில் ..

தொடரும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.

பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்த...

மனதில் ஒரு ஜல்லிகட்டு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும். 1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா?  2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெ...